“சுமந்திரன் பகற்கனவு காண்கிறார் – நாங்கள் வலுவாக இருக்கிறோம்” – அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற விக்கினேஸ்வரன் !

“சுமந்திரன் பகற்கனவு காண்கிறார் – நாங்கள் வலுவாக இருக்கிறோம்” – அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற விக்கினேஸ்வரன் !

 

வடக்கு இலங்கையில் கூட்டணி அறிவிப்புக்கள்இ கட்சித்தாவல்கள்இ புதிய அறிவிப்புகள் என உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் களைகட்ட ஆரம்பித்துள்ளது. இதே நேரம் அனுர அலை இன்னமும் ஓய்ந்தபாடில்லை; இது பெரிய சவாலாக தமிழ்தேசிய கட்சிகளுக்கு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இருக்கும் எனவும் ஆனாலும் தமிழரசு வெற்றி பெறும் எனவும் அண்மையில் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சுமந்திரன் பகற்கனவு காண்கிறார் என கடந்த தேர்தலில் மண் கவ்விய தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) தங்களுடைய தனித்துவத்தை முன்வைத்து செல்ல வேண்டும் என்ற நோக்கில் தங்களுடைய சங்கு சின்னத்தையும் முக்கியத்துவப்படுத்தி முன்வைத்தமையால் எங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாத படியால் நாங்கள் வெளியேறினோம். ஆகவே நாங்கள் தனித்து போட்டியிடுவதாக இப்பொழுது அறிவித்துள்ளோம். தேர்தலின் பின்னர் யார் யாருடன் சேரந்து அந்த நிர்வாகத்தை அமைக்க வேண்டும் என்பது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது யாழ் மாவட்டத்திலுள்ள 17 சபைகளையும் கைப்பற்றுவோம் என தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் பகற்கனவு காண்பதாக தெரிவித்துள்ள விக்கினேஸ்வரன்இ தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் சிங்கள ஆதிகத்திலிருந்து விடுபட்டுத் தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வினை வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *