இருபது இராணுவ வீரர்கள் கைது !
இராணுவ முகாம்களில் இருந்து தப்பிச் சென்ற 20 இராணுவ வீரர்கள் கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இராணுவ வீரர்கள் கண்டி பிரதேசத்தில் பல்வேறு தொழில்களில் பணிபுரிந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அண்மையில் அனுராதபுரத்தில் பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான நபரும் இராணுவத்தில் இருந்து தப்பியோடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.