குமாரவடிவேல் குருபரன் முதல் கௌசல்யா நரேன் வரை: யாழின் குறைவிருத்தி சட்டத்தரணிகள் – யாழ் மக்களின் தலைவிதி !

 குமாரவடிவேல் குருபரன் முதல் கௌசல்யா நரேன் வரை: யாழின் குறைவிருத்தி சட்டத்தரணிகள் – யாழ் மக்களின் தலைவிதி !
யாழின் சட்டத்தரணிகள் குருபரன் முதல் கௌசல்யா வரை சமூத்தைச் சீரழிப்பவர்களாக மாறியுள்ளனர். குறைவிருத்தியுடைய சமூகப் பிரஞையற்ற இவர்கள் யாழ் மக்களின் பிரதிநிதிகளாக மாறுவது யாழ் மக்களை வெட்கித் தலைகுனிய வைக்கின்றது. கள்ளக் காணி எழுதுவது முதல் பெண்களுக்கு விபச்சாரப் பட்டம் வழங்குவது வரை அத்தனை சமூகப் பொறுக்கித் தனங்களையும் இவர்கள் மேற்கொள்கின்றனர். சமூகம் சார்ந்த அடிப்படை அறிவற்ற இச்சட்டத்தரணிகள் தற்போது சமூகம் சார்ந்து கருத்துத் தெரிவிக்குமளவுக்கு தமிழ் சமூகத்தின் நிலை தரம் தாழ்ந்துவிட்டது.
யாழ் மாவட்டத்திலிருந்து தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகளாக தங்களைக் காட்டிக்கொள்ளும் சட்டத்தரணிகளின் குறைவிருத்தி நிலை மிகக் கீழ்நிலைக்குச் செல்கின்றது. இவர்களிடையே சமூகம் சார்ந்த எந்தச் சிந்தனையும் இல்லையென்பதை அவர்களின் செயற்பாடுகள் வெட்ட வெளிச்சமாக்கி வருகின்றது. கடந்த காலங்களில் கள்ளக்காணி எழுதுவதோடு தங்களை மட்டுப்படுத்திக்கொண்டிருந்த இந்தச் சட்டத்தரணிகள் தற்போது அரசியலிலும் சமூக விடயங்களிலும் தலையீடு செய்து தமிழ் சமூகத்தின் எதிர்காலத்தை தங்கள் சுயவருமானங்களுக்காக சுயபுகழ்ச்சிக்காக பேரம் பேசி வருகின்றனர்.
குருபரன் தலைமையிலான கள்ள உறுதி எழுதும் சட்டத்தரணிகள் யாழ் நூலக எரிப்புடன் தொடர்புடைய, பட்டலந்த சித்திரவதைமுகாமுடன் சிக்குண்ட ரணில் விக்கிரமசிங்கவை தனியாகச் சந்தித்தது பற்றிய செய்தியை கடந்த ஆண்டு தேசம்நெற் வெளிக்கொண்டு வந்திருந்தது. ரணிலைச் சந்தித்த இச்சட்டத்தரணிகள் தங்கள் மீது பொலிஸார் கள்ளக் காணி தொடர்பில் பிரச்சினை எடுக்கக்கூடாது எனக் கேட்டுக்கொண்டிருந்ததை தேசம்நெற் அன்றே தெரியப்படுத்தி இருந்தது.
தற்போது தமிழ் மக்களின் வறுமையை கேவலப்படுத்தி விடியோக்கள் போட்டு விழிப்பு நிலையில் உள்ள பெண்களை அவர்களின் வீடுகளுக்குள் நுழைந்து கேவலப்படுத்தும் காணொலிகளை வெளியிட்ட எஸ் கே கிருஷ்ணாவுக்கு ஆதரவாக சட்டத்தரணி குரபரனும் களமிறங்கி இருந்தார். ஆனால் இவர்களுக்கு சளைக்காமல் ஈடுகொடுத்த பொலிஸ் அதிகாரி ராகவன் எஸ் கெ கிருஷ்ணாவை இரு வாரங்கள் தடுத்து வைக்க போராடி ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார். இந்த தமிழ் தேசியவாதச் சட்டத்தரணிகள் அம்பலமாகி உள்ளனர்.
இந்தக் கள்ள உறுதி எழுதும் சட்டத்தரணிகளில் கிருஷ்ணவேனி பெரும் கில்லாடி. மற்றும் மணிவண்ணன் போன்றவர்களும் சளைத்தவர்களல்ல.
தையிட்டி விகாரையை சட்டவிரோதம்மானது என்று கூவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணிச் சட்டத்தரணிகள் பொன்னம்பலம் கஜேந்திரகுமார், அதேசட்சியைச் சேர்ந்த சுகாஸ் போன்றோர் தையிட்டி விகாரை கட்டப்படுவதற்கு எதிராகவோ கட்டப்பட்டதற்கு எதிராகவோ எந்தவொரு வழங்கையும் இற்றைவரை பதிவு செய்யவில்லை.
ஆனால் யாழில் உள்ள போதைப்பொருள், ஆவா கும்பல்கள் மற்றும் வட்டுக்கோட்டை சாதிய வன்முறைக் கும்பல்களுக்காக வாதாடி அவர்களை வெளியே எடுத்து, தங்கள் அரசியலுக்குப் பயன்படுத்தி வருகின்றனர்.
காலம்சென்ற மாவை சேனாதிராஜாவின் இறுதிநிகழ்வில் இவர்களதும் சிறிதரனதும் அடியாட்குழுக்களே மரணச்சடங்கிற்கு வருபவர்களை மிரட்டி இறுதிநிகழ்வை தங்கள் அரசியல் பிரச்சார மேடையாகப் பயன்படுத்தினர்.
இவர்களுக்கு சளைக்காமல் அண்மையில் வன்முறையில் ஈடுபட்டு பட்டப்பகலில் கை விரலை வெட்டி எடுத்த வன்முறையாளனை தன்னுடைய காரில் அழைத்துச் சென்று பொலிசாரிடம் ஒப்படைத்து அவரைக் காப்பாற்றி வெளியே எடுத்துவிட்டவர் சட்டத்தரணி சர்மினி.
இந்தச் சட்டத்தரணிகள் குற்றவாளிகளுக்கு எப்படி சட்டத்துக்குள் மாட்டாமல் வன்முறையில் ஈடுபடுவது போன்றவற்றை கற்றுக்கொடுப்பதாகக் குற்றம்சாட்டுகின்றார். காலம்சென்ற முன்னாள் அமைச்சர் மகேஸ்வரனின் சகோதரர்.
இவர்களோடு தற்போது சமூகத்துக்கு கருத்துச்சொல்ல சில சமூகம் பற்றிய அரிவரிப் புரிதலும் இல்லாத சில சட்டத்தரணிகள் களமிறங்கியுள்ளனர். உலகத்தின் அனைத்துத் தரப்பினராலும் ஒரு பாஸிஸ்ட் என்று அடையாளம் காணப்பட்ட கொலைவெறியனான, இனவெறியனான ஹிட்லரை சட்டத்தரணி வைஷ்ணவி, ஹிட்லர் ஜேர்மன் மக்களுக்காகப் போராடினார் என்று ஊடகமொன்றுக்கு நேர்காணல் வழங்கினார். ஆனால் பெரியார் தமிழ் விரோதியாம். அந்தப்புரம் நடத்தும் யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் படித்து கலைப்பீடாதிக்கு வக்காளத்து வாங்கும் இந்த வங்குரோத்து சட்டத்தரணியிடம் அறிவை எதிர்பார்ப்பது மிகக் கஸ்டம்.
பாலியல் குற்றவாளியை கும்பிடும் பிரேமானந்தாவின் சீடன் சி வி விக்கினேஸ்வரனின் கட்சியில் உள்ள இன்னுமொரு சட்டத்தரணி இராசையா உமாகரன் என்ற சாதிமான். சாதியத்துக்கு எதிராகப் போராடிய பெரியரை கேவலப்படுத்தி, பாலியல் துஸ்பிரயோகம் செய்து ஒரு பெண்ணை 7 தடவை கருக்கலைப்புச் செய்வித்த சீமானுக்கு இவர் யாழ்ப்பாணத்தவர்களின் பெயரில் முண்டுகொடுக்கின்றார்.
இந்த குறைவிருத்திச் சட்டத்தரணிகளின் வரிசையில் நேற்று சட்டத்தரணி கௌசல்யா நரேன் தன் பெயரையும் இணைத்துக் கொண்டுள்ளார். பன்றியோடு சேர்ந்த பசுவும் பவ்வி உண்ணும் என்பது போல் அண்ணன் என்ற பெயரில் சுற்றும் பா உ அர்ச்சுனாவோடு சேர்ந்த கௌசல்யாவின் நிலையும் இது தான்.
ஆயிரம் பேரைக் காதலித்த நான் என்று பெருமை கொள்ளும் அர்ச்சுனா வயது குறைவாக இருந்தால் கௌசல்யாவையே திருமணம் செய்வேன் என்று, வாய்கூசாமல் சொல்கின்றார்.
இதன் தொடர்ச்சியாகவே தம்பி தம்பிராஜா போன்ற சமூகப் பிரஞை அற்றவர்கள், கௌசல்யாவை ‘தேவடியாள்’ என்றும் இன்னும் கேவலமாகவும் பல பதிவுகளை இட்டு வருகின்றார். தம்பி தம்பிராஜா இவ்வாறு எழுதுவது மிகக் கீழ்த்தரமான செயல். இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.
ஆனால் பாதிக்கப்பட்ட கௌசல்யா நரேன், இந்த ஆண் தமிழ் தலிபான்களான பா உ அர்ச்சுனா, ஊழல் ஒழிப்பு அணி வன்னி, வம்பன்டொட்கொம், எஸ் கெ கிருஷ்ணா போன்றவர்களோடு சேர்ந்து பாதிக்கப்பட்ட பெண்களான சாளினிக்கும், ஊடகவியலாளரான சங்கவிக்கும் விபச்சாரப் பட்டம் கட்டுகின்றார்.
ஒரு சட்டத்தரணியாக இருந்து சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தை அணுகும்படி சொல்லாமல் சட்டத்தை தங்கள் கையில் எடுப்பதை ஆதரிக்கின்றார். தம்பி தம்பிராஜா கௌசல்யாவை ‘தேவடியாள்’ எனக்கு குறிப்பிடுவது எவ்வளவு மோசமானதோ அதேயளவு மோசமானது, அண்ணாவும் தங்காவும் – அர்ச்சுனாவும் கௌசல்யாவும் சேர்ந்து சாளினியையும் சங்கவியையும் விபச்சாரிகள் என்று முத்திரை குத்துவது.
இந்தக் குறைவிருத்திச் சட்டத்தரணிகள் எந்த முதலீடும் இல்லாமல் மக்களைச் சுரண்டிப் பணம் பார்ப்பதை பொறுத்தக்கொள்ளலாம் ஆனால் அடிப்படைச் சமூக அக்கறையற்ற சமூக விழுமியங்களைப் புரிந்துகொள்ளாத இந்தக் கூட்டம் சமூகத்துக்கு கருத்துச் சொல்ல முற்படுவதை அனுமதிக்க முடியாது. இவர்கள் அடுத்த தலைமுறையையும் தங்களைப் போன்ற குறைவிருத்தி உடையவர்களாக்கி விடுவார்கள். ஆனால் தமிழ் மக்கள் மிக விழிப்பானவர்கள். இந்தக் குறைவிருத்தியாளர்களை விரைவிலேயே அடையாளம் கண்டு கொள்கின்றனர்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *