பட்டலந்த ரணிலுக்கு முற்றுப்புள்ளியாக அமையுமா ?

பட்டலந்த ரணிலுக்கு முற்றுப்புள்ளியாக அமையுமா ?

மார்ச் 14 பட்டலந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட வேளை சபாநாயகர் அதன் கொடூரத்தை நினைத்து கண் கலங்கியிருந்தார். ரணில் விக்கிரமசிங்கவின் அல்ஜசீரா நேர்காணலைத் தொடர்ந்து பட்டலந்த அறிக்கை தற்போது பாராளுமன்றத்துக்கு வந்துள்ளது.

மார்ச் 14இல் இவ்வறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு வழங்குவதாக பீமல் ரத்நாயக்கா பாராளுமன்றில் தெரிவித்து இருந்தார். மேலும் ஜனாதிபதியின் விசேட குழுவொன்று பட்டலந்த அறிக்கையை ஆராய நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழு இவ்வறிக்கையை வைத்து நடவடிக்கைகள் எடுப்பது என்ற கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பட்டலந்தை அறிக்கை சட்டமா அதிபரின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் இந்த அறிக்கையை ஆய்வு செய்து அதில் யாருக்கு எதிராகவும் வழக்குத் தொடர முடியுமா என்பதை ஆராய்ந்து முடிவுக்கு வரும். பட்டலந்த அறிக்கையில் யாராவது குற்றம் சாட்டப்பட்டு இருந்தால் குற்றப்பதிவைச் செய்ய முடிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்படும்.

பட்டலந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் முன்னணி சோசலிசக் கட்சியும் அழுத்தங்களை வழங்கியிருந்தது. இந்த அறிக்கை முன்னாள் ஜனாதபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசில் வாழ்வுக்கு முடிவு கட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்குலகம் ரணிலை வைத்துக்கொண்டே ஜேவிபிக்கு ஆப்பு வைக்கும் என்ற எண்ணம் அரசியல் விமர்சகர்களிடம் உள்ளது. அந்த வைகயில் ரணில் பதிவி விலகிய பின்னரும் தீவிரமான அரசியலில் சர்வதேச அரங்கில் ஈடுபட்டு வந்திரக்கின்றார். இந்தப் பட்டலந்த விவகாரம் ரணிலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் விவகாரமாக அமைய வாய்ப்புள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *