மாவீரர்களின் தியாகங்களில் அரசியல் செய்யும் அர்ச்சுனா, ஸ்சுஸ்திகாவிற்கு கொலைமிரட்டல் – ஸ்வஸ்திகாவை “அரசியல் விபச்சாரி“ எனக் குறிப்பிடும் வைத்தியர் !
பாராளுமன்றத்தில் பெண் ஒருவரை விபச்சாரி என விளித்த இராமநாதன் அர்ச்சுனாவை எதிர்த்து கேட்காமல் வேடிக்கை பார்த்த எம்பிக்கள் தொடர்பில் மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினரும், மனித உரிமை சமூகச் செயற்பாட்டாளருமான சட்டத்தரணியுமான ஸ்சுவஸ்திகா அருளிங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
ஸ்சுவஸ்திகா இது தொடர்பில் தனது பேஸ்புக் பதிவில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: பாராளுமன்ற விவாதத்தில் எம்.பி அர்ச்சுனா ஒரு பெண்ணின் பெயரை குறிப்பிட்டு விபச்சாரி என அடையாளப்படுத்தினார். இதனை அங்கு யாருமே எதிர்த்து கேட்கவில்லை. அந்த பெண்ணின் பெயரை ஹன்சன்ட்டில் இருந்து நீக்க வேண்டும் என்று கூட யாருமே கேட்கவில்லை. ஆனால் ஒரு பெண்ணின் பெயர் தவறாக உச்சரிக்கப்படும் போது அது உடனடியாகவே ஹன்சார்ட்டிலிருந்து நீக்கப்படும் காலத்தில் இருக்கிறோம் என்று நினைத்தேன், ஆனால் இந்தச் சிறப்புரிமை பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினர்களுக்கு மட்டுமா? அப்படியானால் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இல்லையா? என ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
சட்டத்தரணி சுவஸ்திகா அருளலிங்கத்தின் பதிவுக்கு பா.உ இராமநாதன் அர்ச்சுனா தனது பாணியில் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் தனது சமூக வலைத்தள கணக்கின் மூலம் பதிலளித்துள்ளதார்.
இதற்கு எதிர்வினையாற்றிய பா உ அர்ச்சுனா தனது கீழ்த்தரமான மற்றவர்களை கீழ்நிலைப்படுத்தும் விதத்தில் பதிலளித்தார். “எலக்சன் வரும்போது ஸ்வஸ்திகா போன்றவர்கள் என்னைப் பற்றி நான்கு வசனம் கூவினால் தான் மக்கள் திரும்பிப் பார்ப்பார்கள் என்பதற்காக முகப்புத்தகத்தில் கூவிக் கொண்டிருப்பதை பார்த்தேன். இன்று நேற்று அல்ல அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காக காலம் காலமாக பாதைகளில் நின்று கூவுவதை நான் வைத்தியசாலை செல்லும்போது பார்த்திருக்கிறேன். இந்த பிழைப்புக்கு பிச்சை எடுக்கலாம். சில வேளைகளில் இவ்வாறான ஜென்மங்களை யாரோ ஒருவர் பெற்று விட்டு பாதைகளில் விடுகிறார்கள் என்று நினைக்கும் போது மிகவும் கவலையாக இருப்பதுண்டு. ஆனால் பண்ணுகிற காமெடிகளை பார்க்கும்போது மனம் விட்டு மனதுக்குள் சிரிப்பதுண்டு. இப்போதும் சிரித்தவாறே கடந்து செல்கிறேன். “பெட்ட நாய்கள் ஊளை இடுவதால் சோலோ லோபோ – நரிநாய் அசரப்போவதில்லை.” வேறு ஒரு நல்ல விடயத்தை எடுத்து கூவும் மாறும்; அவ்வாறு கூவினால் இந்தத் தடவை மாநகர சபையிலோ அல்லது உள்ளூர் ஆட்சி சபையிலோ ஒரு கதிரை கிடைக்கலாம் என்ற மன ஆதங்கத்தில் பதிவிடுகிறேன். சும்மா இருக்கும் அர்ஜுனாவை சீண்டி பார்ப்பதில் இந்த நாலு கால்களுக்கு ஏதோ சந்தோசம் தான்” என குறிப்பிடப்பட்டுள்ளார்.
எம்பி அர்ச்சுனா தனது முகநூலில் ஸ்வஸ்திகாவை “அரசியல் விபச்சாரி“ எனக் குறிப்பிட்டு புலிகளின் பெயரலால் கொலை மிரட்டல் விடுகிறார். ஸ்சுவஸ்திகா புலிகளை பாஸிஸ்ட்கள் என்று விமர்ச்சித்ததை நினைவுபடுத்திக் கொண்டு “ காலம் இப்போது வரை சுவஸ்திகாவை உயிரோடு வைத்திருக்கிறது .,,.., உனக்கு கவலை இல்லையா தம்பி” என்று மாவீரர்கள் கல்லறைகளில் இருந்து தன்னைக் கேட்பதாக எம்பி அர்ச்சுனா தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
ஸ்சுவஸ்திகாவை பொறுத்தவரை “அரகலய “ போராட்டம் தொடக்கம் எல்லாவிதமான ஒடுக்குமுறைகளிற்கு எதிரான போராட்டங்களிலும் பங்கெடுப்பவர். இடதுசாரி அரசியல் பேசுபவர். துணிச்சலான பெண்மணி. கௌசல்யா போன்றல்லாமல் சுயமாக சிந்தித்து செயல்படும் சுதந்திரமான தனித்துவமான சட்டத்தரணி.
ஸ்சுவஸ்திகாவின் புலிகளைப் பற்றிய விமர்சனம் அவருடைய அரசியல் முதிர்ச்சியின்மையின் வெளிப்பாடு என அன்றே தேசம்நெற் சுட்டிக்காட்டியிருந்தது. ‘பாஸிஸம் ‘ என்பதன் அகண்ட பொருள் அதன் கூறுகள் என்னவென்பதை புலிகளை விமர்சிக்கும் சட்டத்தரணி ஸ்வஸ்திகா அருளலிங்கம் மட்டும் அல்ல புலிகளை ஆதரிக்கும் சட்டத்தரணி வைக்ஷணவி சண்முகநாதனுக்கும் கூட தெளிவாக புரியவில்லை. அந்த அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பாஸிஸ அமைப்பு இல்லை என்பது நிறுவப்பட்ட உண்மை.
ஒருவேளை ஸ்சுவஸ்திகா தன்னுடைய தவறான விமர்சனத்தை தற்சமயம் வாபஸ் பெற்றிருக்கலாம். இல்லை ஸ்சுவஸ்திகா அதே நிலைப்பாட்டில் இருந்தால் கூட யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.
வைக்ஷ்ணவி சண்முகநாதனைப் பொறுத்தவரை உலகத்திற்கே கொடூர பாஸிஸ ஆட்சியை நடத்திக் காட்டிய கிட்லருடன் விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை உவமித்தவர். வைக்ஷ்ணவி குறுந் தமிழ்த் தேசியம் பேசுவதால் எம்பி அர்ச்சுனாவுக்கு அவர் கண்ணில்படவில்லைப் போலும். அதைவிட மெத்தப்படித்த அர்ச்சுனாவுக்கும் கூட பாஸிஸம் என்றால் என்னவென்றே தெரிந்திருக்க நியாமில்லை.
சுயாதீனமாக சிந்தித்து செயற்பட முடியாது எம்பி அர்ச்சுனாவின் கைப்பொம்மையாக இருக்கும் சட்டத்தரணி கௌசல்யா போன்று சட்டத்தரணி, ஸ்சுவஸ்திகாவையும் எம்பி அர்ச்சுனா நடத்த முற்படுவது வெட்கக்கேடானது. இவ்வாறு பெண் வெறுப்பரசியலை எம்பி அர்ச்சுனா புலிகளின் பெயரால் முன்னெடுப்பது புலிகள் அமைப்பிற்கும் இழுக்கு.
பெண்கள் பொதுவெளியில் வந்தால் அவர்களின் நடத்தை மீது சேறுவாரிப் பூசும் பிற்போக்குவாதி எம்பி அர்ச்சுனா என்பது நிரூபணமாகிவிட்டது. முற்போக்கான ஈழத் தமிழர்களின் அரசியலில் அர்ச்சுனா போன்ற கடும்வலதுசாரிகள் வளருவது ஆபத்தானது. அரசியலில் கருத்து வேறுபாடு இருக்கலாம். அதற்காக நாய் என விமர்சிப்பதன் மூலம் அர்ச்சுனா தன்னுடைய அரசியல் வறுமையை வெளிப்படுத்தி நிற்கின்றார்.
பல்கலைக்கழகத்தில் ரெக்ஸ்ற்புக் படித்து கார்மக்கானிக்காகவும் டொக்டராக – பொடி மக்கானிக்காகவும் வருபவர்கள் தான் படித்தவர்கள் என்று நம்புபவர்தான் பா உ அர்ச்சுனா. அவருக்கும் அறிவுக்கும் வெகுதூரம். இந்த யாழ்ப்பாணச் சிந்தனைமுறையில் ஊறிய மட்டை அர்ச்சுனா. எட்டாம் தரத்தோடு விடுதலைப் போராட்டத்துக்கு போனவர்களை வே பிரபாகரன் உட்பட, சாதாரணர்களை தன்னுடைய பட்டத்தைக் காட்டி மிரட்டி வருகின்றார். புலிகளின் தலைவர் பிரபாகரன் கூட தனக்கு ஆலோசகராக படித்த பாலசிங்கத்தை மதியுரைஞராக வைத்திருந்தார் என்று விளக்கம் வேறு அளித்து வருகின்ற குறைபுத்திக்காரர் தான் பா உ அர்ச்சுனா.