தமிழ்த் தலைவர்கள் பெண்களுக்கு விபச்சாரி பட்டம் கொடுக்க, சிங்கள தலைவர்கள் பெண்களை வர்த்தகத் தலைவிகளாக்குகின்றனர் !

தமிழ்த் தலைவர்கள் பெண்களுக்கு விபச்சாரி பட்டம் கொடுக்க, சிங்கள தலைவர்கள் பெண்களை வர்த்தகத் தலைவிகளாக்குகின்றனர் !

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியில் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். இருப்பினும், அவர்களின் பெறுமதியான பங்களிப்பு இருந்தபோதிலும், கட்டமைப்பு ரீதியான தடைகள் பொருளாதாரத்தில், அவர்களின் முழுமையான பங்களிப்பை மட்டுப்படுத்தியுள்ளன என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

வர்த்தகத் தலைவர்களாகவும், தொழில்முயற்சியாளர்களாகவும், ஏற்றுமதியாளர்களாகவும் பெண்கள் முன்னேறக்கூடிய பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம் இந்தத் தடைகளை அகற்ற எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஆனால் இதற்கு மாறாக தமிழ் தலைவர்கள் பா உ அர்ச்சுனா மற்றும் பா உ சிறிதரன் போன்றவர்கள் பெண்களை விபச்சாரிகளாகவும் போகப் பொருளாகவும் கருதுகின்றனர். பா உ அர்ச்சுனா சாதாரண பெண்களை பாராளுமன்றத்தில் விபச்சாரி என்று தூற்றுகின்றார். பா உ சிறிதரனின் அலுவலகத்தில் பெண்கள் பாலியல் லஞ்சம் கோரப்படுகின்றனர். அவ்வாறானவர்களை தொடர்ந்தும் தன் அரசியல் தேவைக்காகப் பயன்படுத்தி வருகின்றார்.

எந்தவொரு தமிழ் கட்சியும் பாராளுமன்றத்துக்கு பெண்களை அனுப்பவில்லை. அவ்வாறு சமூகத்தில் முன்னுக்கு வரும் பெண்களை இழுத்துவிழ்த்துவதில் தமிழ் தலிபான்கள் முன்நிற்கின்றனர். பா உ அர்ச்சுனா அவருடைய அடிப்பொடியான லண்டன் தமிழ் அடியான் இவர்களுடைய ஊதுகுழல் ஊழல் ஒழிப்பு அணி வன்னி என்று ஒரு சமூகவிரோதக் கும்பல் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தும் வக்கிர புத்தியோடு செயற்படுகின்றனர். இவர்கள் வீட்டுப் பெண்கள் இந்த வக்கிரபுத்தி கொண்டவர்களை எவ்வாறு தாங்கிக் கொள்கின்றனர் எனத் தெரியவில்லை எனப் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *