ஈழத்தமிழர் வரலாற்றில் கனடாவின் நீதியமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி !

ஈழத்தமிழர் வரலாற்றில் கனடாவின் நீதியமைச்சராக ஹரி ஆனந்தசங்கரி !

கனடா வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்தில் பிறந்தவரான ஹரி ஆனந்தசங்கரி நீதி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரியின் இரண்டாவது மனைவியான யோகம் அவர்களின் இளைய புதல்வர் ஹரி ஆனந்தசங்கரி ஆவர்.

1980 களில் ஹரியின் பெற்றோருக்கு மணமுறிவு ஏற்பட்டமையை தொடர்ந்து ஹரி தாயின் அரவணைப்பிலேயே வளர்ந்தார். 1980 ஆண்டிலிருந்து 1983 ஆம் ஆண்டு வரை அயர்லாந்தில் தாயாருடன் வாழ்ந்த ஹரி, பின்னர் கனடாவிற்கு புலம்பெயர்ந்திருந்தார். அரசியல் விஞ்ஞான பட்டதாரியும் சட்டமாணியுமான ஹரி 2023 இல் முடிக்குரிய சுதேசிகள் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

கனடாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஒன்டாரியோ மாகாணத்தில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக ஹரி ஆனந்தசங்கரி லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *