மூதூர், கொழும்பு இரட்டைப்படுகொலை – கொலைக்கலாச்சாரம் !
கொழும்பு – கிராண்ட்பாஸின் வெஹெரகொடெல்ல பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு சகோதரர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கூர்மையான ஆயுதத் தாக்குதல்களில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு சகோதரர்கள் என்று கூறப்படுகிறது.
இதற்கு முந்தைய தினம் திருகோணமலை மூதூரில் 15 வயது தமிழ்ச் சிறுமி தன்னுடைய இரு பெரியம்மாக்களை குத்திக் கொலை செய்தது தெரிந்ததே.