வடக்கில் தொடரும் சட்டவிரோத மரக்கடத்தல்

வடக்கில் தொடரும் சட்டவிரோத மரக்கடத்தல்

வவுனியா- மன்னார் வீதியில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனம் ஒன்று சிக்கியுள்ளது. சோதனைச் சாவடியில் நிறுத்தாமல் சென்ற வாகனத்தை பொலிஸார் துரத்திச் சென்ற போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. வாகனச் சாரதி உட்பட இருவர் விபத்திற்குள்ளான வாகனத்தை கைவிட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

மீட்கப்பட்ட வாகனத்தில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 5 இலட்சம் பெறுமதியான முதிரை மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளன. தப்பிச் சென்ற குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *