சுன்னாகம் அன்று ஜேவிபி இன் கோட்டை ! அடுத்த 10 ஆண்டுகள் மக்களது – எங்களது ஆட்சிதான் ! கழிவு ஒயில் ஊழல் மோசடிக் கண்டு பிடிப்போம் ! அமைச்சர் சந்திரசேகர்
தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் ஆங்காங்கு குழாயடிச் சண்டையில் மோதிக்கொண்டுள்ளனர். பாலியல் குற்றச்சாட்டுக்களில் பின்னிப்பிணைந்திருக்கின்றனர். இந்த இடைவெளியில் தேசிய மக்கள் சக்தி கிராமம் கிராமமாகத் தூள் கிளப்புகின்றது. தமிழ் தேசியத் தலைமைகள் அறியாத சந்துபொந்தெல்லாம் நுழைந்து மக்களோடு மக்களாக உறவாடுகிறார்கள். மக்களிடம் நிம்பிக்கையை விதைக்கின்றார்கள். சுன்னாகத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் அநீதிக்கு எதிராகப் போராடும்படி அறைகூவல் விடுத்தார்.
அதற்கு முன்பேசிய கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம்சந்திரசேகர் மூடிமறைக்கப்பட்ட சுன்னாகம் கழிவு நீர் பிரச்சினைய மூடி மறைத்ததில் இன்றைய தமிழ் தேசியக் கைகள் அணைத்தும் அந்தக் கழிவு எண்ணையில் கை நனைத்திருந்தனர். தற்போது தங்கள் கைகளை மாவீரர்களை வைத்தும் தமிழ் தேசியத்தை வைத்தும் துடைத்தெறிந்துவிட்டு மீண்டும் வாக்கு வேட்டையில் இறங்கி உள்ளனர். சுன்னாகத்தை ஜேவிபியின் கோட்டை எனக் குறிப்பிட்ட அமைச்சர் சந்திரசேகர் எங்களுக்கு உங்கள் வாக்குளைத் தாருங்கள் இந்த மோசடிகளை அம்பலப்படுத்தி உங்கள் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்போம் எனத் தெரிவித்தார்.
சுன்னாகம் கழிவு எண்ணைப் பிரச்சினை வடமாகாண சபையின் ஒப்புதலுடன் மூடி மறைக்கப்பட்டது. அன்றைய அதில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மற்றும் விவசாய சூழலியல் அமைச்சர் பொன் ஐங்கரநேசன் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டது. வடமாகாண சபையில் இன்றைய தேசியக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இணைந்துள்ள அன்றைய வடமாகாண அமைச்சர் பொன் ஐங்கரநேசன் போன்றவர்களின் கரங்கள் கறைபடிந்திருந்தது.
கடந்த காலங்களில் உள்ளுராட்சி சபைகளை வைத்திருந்த கட்சிகளின் ஊழல், மோசடி ஆட்சிக்கு முடிவு கட்டி ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்த தமிழ் மக்கள் முன்வரவேண்டும் என்று அமைச்சர் சந்திரசேகர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.