இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுப்போம் ! நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுப்போம் ! நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

‘பயங்கரவாத தடைசட்டம் நீக்கப்பட வேண்டும், தீர்க்கப்படாமலிருக்கும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்போம்’ என நீதி அமைச்சரான ஹர்ஷன நாணயக்கார அவர்கள் தெரிவித்துள்ளார். இவர் புதிய அரசமைப்பு உருவாக்கம் மற்றும் பயங்கர வாத தடைசட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பயங்கரவாத தடைசட்டம் நீக்குவது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அரசகுலரத்ன தலைமையில் குழு ஒன்று கூடியது எனவும், தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு காலம் காலமாக தொடர்ந்து வரும் இனப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் பயங்கரவாத சட்டத்தை நீக்குவதற்கும் புதிய சட்டத்தை இயற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு நாட்டு மக்களின் கருத்துக்களுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அதற்காகவே மக்கள் ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க அவர்களை தெரிவு செய்துள்ளனர் எனவும் தொடர்ந்து மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் நீதி மற்றும் ஒருமைப்பாடு அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவது தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதியாக இருந்துள்ளது. மேலும் தற்போது முடிவுக்கு வரவுள்ள ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீளப்பெறுவதற்கு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதை நோக்கி அரசு நகர வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது. அத்தோடு சிறுபான்மைச் சமூகங்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும் வகையில் உள்ளுராட்சித் தேர்தல் காலத்தில் அதன்கான முனைப்பைக்காட்டுவது தேசிய மக்கள் சக்திக்கு பலத்தைச் சேர்க்கும். அந்த வகையில் ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்த நினைக்கின்றார் ஜனாதிபதி அனுரா. அவரின் கற்றப்பொல் சரியாகவே குறிவைக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *