சட்ட விரோதமாக இலங்கையில் தங்கியிருந்த 22 இந்தியர்கள் கைது !

சட்ட விரோதமாக இலங்கையில் தங்கியிருந்த 22 இந்தியர்கள் கைது !

சுற்றுலா விசாவில் மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த 25 – 35 வயதுக்குட்பட்ட 22 இந்தியர்கள் விசா முடிவடைந்தும் இந்தியாவிற்கு நாடு திரும்பாது இலங்கையில் சட்ட விரோதமாக தங்கியிருந்து கூலி வேலையில் ஈடுபட்டு வந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 17 பேர் சுற்றுலா விசாவிலும், 4 பேர் குடியிருப்பு விசாவிலும், ஒருவர் வணிக விசாவிலும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவு சந்தேகத்தின் பெயரில் இரண்டு இந்தியர்களை விசாரணை செய்த பின் ராஜகிரிய எனும் பிரதேசத்தில் அலுவலகம் ஒன்றில் சுற்றிவளைப்பு மேற்கொண்டு இவர்களை கைது செய்துள்ளனர்.

மேலும், இவர்கள் வெலிசார தற்காலிக தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் இந்தியாவிற்கு விரைவில் அனுப்புவதற்குமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இஸ்ரேலியர்கள் பலரும் இலங்கையில் சட்டவிரோதமாக நீண்டகாலம் தங்கியிருப்பதாக சில குற்றச்சாட்டுகள் உள்ளது. மேலும் வெளிநாட்டவர்கள் இலங்கையில் தங்கியிருந்து சட்டவிரோத செய்றபாடுகளில் ஈடுபடுவதும் பலரின் கவனத்தை ஈர்க்கின்றது.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *