காணாமல் போன இளைஞன் குளத்திலிருந்து சடலமாக மீட்பு !
வவுனியா பாவற்குளம் சூடுவெந்த புலவு அலைக்கரையிலிருந்து இரத்தக் காயங்களுடன் உளுக்குளம் பொலிஸாரால் சடலமொன்று மீட்க்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் விநாயகபுரத்தைச் சேர்ந்த 33 வயதான கோபிதாஸன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் 14 ஆம் திகதியிலிருந்து காணாமல் போய்யிருந்ததாக உறவினர்களால் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்றைய தினம் சடலாமாக மீட்கப்பட்டுள்ளது. இறப்புக்கான காரணம் தெரியவில்லை. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்கின்றனர்.