பிள்ளையானின் சாரதி CID யால் அதிரடியாக கைது !
முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதி இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு வருகை தந்திருந்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர்.
பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் சாரதியான ஜயந்தன் என்பவரே இவ்வாறு நேற்றைய தினம் ஏப்ரல் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் போன சம்பவம் தொடர்பிலேயே அவரை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.