ஜார்க்கண்டில் 6 நக்சல்கள் என்கவுண்டரில் கொலை !

ஜார்க்கண்டில் 6 நக்சல்கள் என்கவுண்டரில் கொலை !

இந்தியாவின் மத்திய ரிசேர்வ் படையினரின் தொடர் தாக்குதல்களில் சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் சமீப காலங்களில் பல நக்சல் போராளிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் லுகு மலைப்பகுதியில் பதுங்கியிருந்த நக்கசல் போராளிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய ரிசேர்வ் படை அறிவித்துள்ளது. அத்துடன் தமது தரப்பில் யாரும் காயமுறவில்லை எனவும் கூறியுள்ளது. நக்சல் போராளிகளிடமிருந்த துவக்குகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அறிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *