டொனால்ட் டிரம்பிற்க எதிராக மக்கள் வீதிகளில் இறங்கினர் !
‘50501’ என்ற போராட்டக்குழுவின் ஏற்பாட்டில் அமெரிக்காவில் மக்கள் வீதிகளில் திரண்டு ஜனாதிபதி ட்ரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஏப்பிரல் 5 ஆம் திகதி மற்றும் 19 களில் நியுயோர்க் நகரம் மற்றும் வெள்ளைமாளிகை முன் திரண்ட மக்கள் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக கோஷமிட்டனர். ‘50501’ அமைப்பு அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும் ட்ரம்ப் எதிரான ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்துள்ளது. 50 போராட்டங்கள், 50 மாநிலங்கள், 1 இயக்கம் என்பதைக் குறிக்கும் வகையில் ‘50501’ என இப்போராட்டக்குழுவுக்கு பெயரிட்டுள்ளனர்.
டொனால்ட் ட்ரம்பின் குடிவரவு கொள்கைகள், வரிக் கொள்கைகள், அரச ஊழியர்களின் ஆட்குறைப்பு போன்ற அடாவடியான கொள்கைகளுக்கு எதிராக போராடுகின்றனர்.
“அமெரிக்காவில் மன்னர்கள் இல்லை“ பதாதைகளை தாங்கிக் கொண்டு கோஷமிடுகின்றனர். ட்ரம்ப் கிட்லர் போன்று செயற்படுவதாகவும் விமர்சிக்கின்றனர். டொனால்ட் ட்ரம்பின் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் திட்டத்தை கடுமையாக விமர்சிக்கின்றனர்.