மத்திய மாகாணத்தில் தகவல் தொழிநுட்ப கல்வியறிவை மேம்படுத்த முதலமைச்சர் நடவடிக்கை

sarath-cp-cm.jpgமத்திய மாகாணத்தில் தகவல் தொழிநுட்ப கல்வியறிவை மேம்படுத்தும் நோக்கில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
 
இதன் முதல் கட்டமாக இந்த மாகாண மக்களின் தகவல் தொழிநுட்ப கல்வியை விருத்தி செய்யும் நோக்கில் கண்டி கெட்டம்பேயில் மத்திய நிலையமொன்றை நிர்மாணிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளார். இந்த நிர்மாணப்பணிகளுக்காக மத்திய மாகாண சபை 4 கோடி 50 லட்சம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. இது தவிர தகவல் தொழிநுட்ப துறையை முன்னேற்றும் நோக்கில் பல வேலைத்திட்டங்களை அமைச்சு திணைக்கள மட்டத்தில் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மற்றொருபுறம் இந்த நவீன தொழினுட்பத்தில் ஈடுபாடுள்ளவர்களுக்கு கணினி தொழினுட்ப பயிற்சி அளிக்கும் நோக்கில் பயிற்சித்திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *