பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த ஐ.சி.சி. ஆலோசனை

28icc.jpgசர்வதேச கிரிக்கெட் கௌன்ஸில் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது. லண்டனில் கிளைவ் லொயிட் தலைமையில் சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸிலின் கிரிக்கெட் குழு கூட்டம் ஆரம்பமானது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தின் போதே பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

பார்வையாளர்களின் வருகையை அதிகரிக்கும் வகையில் ஒருநõள் போட்டிகளை போன்று டெஸ்ட் போட்டிகளையும் பகலிரவு ஆட்டங்களாக நடத்தலாம் எனும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், டெஸ்ட் போட்டிகளில் நடுவர்களின் முடிவை எதிர்த்து முறையீடு செய்ய வாய்ப்பளிக்கும் முறையை தொடர்வது குறித்தும் அலோசிக்கப்படவுள்ளது. தற்போது இந்த முறை பரிசோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இது குறித்து முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது

இந்த குழுவின் பரிந்துரை கிரிக்கெட் கௌன்ஸிலின் முதன்மை குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜூன் மாத இறுதியில் இந்த குழு கூடி இறுதி முடிவு எடுக்கும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *