இரத்த ஆறு ஓடாதவகையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ளது – அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவிப்பு

mahinda_samarasinghe.jpgமுப்பது வருடங்களுக்கு மேலாக நாட்டில் நீடித்திருந்த பயங்கரவாதத்தை இரத்த ஆறு ஓடாத வகையில் ஒழித்துக் கட்டிய பெருமை இலங்கைக்கு மாத்திரமே உரித்தாகும் என அனர்த்த இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

புலிகளிடமிருந்து மீட்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான சிவிலியன்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருவதே அரசாங்கத்தின் அடுத்தகட்ட இலக்கு எனவும்  அவரது அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் கூறினார்.  புலிகளின் பிடியிலிருந்து அனைத்து சிவிலியன்களையும் அரசாங்கம் எவ்வாறு வெற்றிகரமாக மீட்டெடுத்ததோ அதேபோல் அவர்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவந்து வடக்கில் மீண்டும் ஜனநாயகம் நிலை நிறுத்தப்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை எனவும் அமைச்சர் மேலும்  தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • palli.
    palli.

    கிறுக்கு பிடித்த அமைச்சரே அப்போ வன்னியில் ஓடுவது என்ன மகாவலி ஆறா???

    Reply