யுத்தம் முழுமையாக நிறைவடைந்து விட்டது முப்படை தளபதிகளும் ஜனாதிபதிக்கு அறிவிப்பு

18052009.jpgபயங்கர வாதத்திற்கு எதிராக 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் முழுமையாக நிறைவடைந்து விட்டது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் ஆகியோர் ஜனாதிபதியும் முப்படைத் தளபதியுமான மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று திங்கட்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முப்படைத்தளபதியினால் 2006 ஆம் ஆண்டு ஜுலை மாதம் வழங்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றி தங்களுடைய கடமைகளை பூர்த்தி செய்துள்ளதாகவும் நாட்டின் முழு பாதுகாப்பும் படையினரின் வசமுள்ளதாகவும் முப்படைகளின் தளபதிகளும் படைத்தரப்பு முக்கியஸ்தர்களும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா, கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னாகொட , விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் ரொஷான் குணத்திலக்க ,பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன, சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோரை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *