இலங்கை யின் வட பிரதேசம் பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டதைக் கொண்டாடும் முகமாக நாளை 19 ஆம் திகதி முதல் ஒரு வார காலத்துக்கு அரசாங்கத்தினால் விடுதலை வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் சகல அரசாங்க நிறுவனங்களிலும் தேசியக் கொடியை ஏற்றிவைக்குமாறும் நாளை பாராளுமன்றத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரையை சகலரும் செவிமடுக்கக்கூடிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் சகல அரச நிறுவனத் தலைவர்களுக்கும் அரச நிருவாக உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் வேண்டுகேள் விடுத்துள்ளார்.