இங்கிலாந்தில் பாராளுமன்றம் முன் போராட்டம்: 10 தமிழர்கள் கைது

இலங்கையில் போர் நிறுத்தம் கோரி இங்கிலாந்து பாராளுமன்றம் முன்பு அங்குள்ள தமிழர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது பிரபாகரன் கொல்லப்பட்டதாக வெளியாகும் தகவல்களை அவர்கள் மறுத்து வருகின்றனர். இந்நிலையில் லண்டனில் உள்ள பாராளுமன்ற கட்டிடம் முன்பு நேற்று நூற்றுக்கணக்கான தமிழர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அப்போது போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் 3 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 10 தமிழர்களை லண்டன் போலீசார் கைது செய்தனர். இங்கிலாந்தில் மட்டும் 3 லட்சம் தமிழர்கள் வசித்து வருகின்றனர். இலங்கையில் மீண்டும் விடுதலைப்போராட்டம் தொடரும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *