அடுத்து வரும் சில தினங்களுக்கு மன்னார் குடா முதல் மேற்கு, தெற்கு மற்றும் தென் கிழக்கு கடற்பரப்பு கொந்தளிப் பாக இருக்குமென்பதால் இந்த நாட்களில் கடலுக் குச் செல்லுவதை மீனவர்கள் தவிர்த்துக் கொள்ளுவது நல்லது என்று வானிலை அவதான நிலையம் நேற்று தெரிவித்தது.
இக் காலப் பகுதியில் கடல் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும். இது சில சமயம் 60 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க முடியும் என்றும் அந் நிலையம் குறிப்பிட்டிருக்கி ன்றது.
தற்போது தென் மேல் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி ஆரம்பமாகியுள்ள தால் மன்னார் குடா, வட மேற்கு, மேற்கு, தெற்கு, தென் கிழக்கு கடற்பரப்பு அடுத்துவரும் சில தினங்க ளுக்குக் கொந்தளிப்பாக இருக்கும் என்றும் அந் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.