நோட்டன் பிரிட்ஜில் மண்சரிவு – 6 பேர் மரணம்

earth-slip.jpgஹட்டன் – நோட்டன்பிரிட்ஜ் பகுதியில் நேற்றுக் காலை (20) ஏற்பட்ட மண் சரிவில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரும், இரண்டு உறவினர்களுமே இவ்வாறு வீட்டுடன் மண்ணில் புதையுண்டு உயிரிழந்தனர். நோட்டன்பிரிட்ஜ் – விதுலிபுர, கெஹெல் கமுக்கந்த கிராமத்திலுள்ள வீடொன்றே நேற்றுக் காலை ஏழு மணியளவில் ஏற்பட்ட மண் சரிவில் புதையுண்டதாக அம்பகமுவ பிரதேச செயலாளர் டபிள்யூ. எம். குணவர்தன தெரிவித்தார்.

இறந்தவர்களுள் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் இரண்டு சிறுவர்களும் அடங்குவர். கணவன், மனைவி, இரு பிள்ளைகள் மற்றும் இரு உறவினர்களுமே உயிரிழந்துள்ளனர். இவர்களது சடலங்கள் நேற்றுக் காலை மீட்கப்பட்டு வட்டவளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இறுதிக் கிரியைகளை அரச செலவில் நடத்துவதற்குப் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலர் தெரிவித்தார்.

அதே நேரம், மண் சரிவு ஏற்படுமென இனங் காணப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள இடங்களிலிருந்து மக்களை வெளியேறுமாறும் அவர் கேட்டுக் கொண்டு ள்ளார். உடனடியாக வெளியேறி உறவினர் வீடுகளிலேனும் பாடசாலைகளிலேலும் தங்கியிருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.மழை தொடர்ந்து நீடித்தால் மகாவலி கங்கை பெருக்கெடுக்கும் வாய்ப்பு உள்ளதாக அம்பகமுவ பிரதேச செயலாளர் தெரிவித்தார். இதனால் மக்களை அவதானமாக இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *