இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக மன்மோகன்சிங் மீண்டும் பதவி ஏற்றார். அவருடன் 19 `கேபினட்’ மந்திரிகளும் பதவி ஏற்றனர். இவர்களில் பிரணாப் முகர்ஜிக்கு நிதித்துறையும், ப.சிதம்பரத்துக்கு உள்துறையும், ஏ.கே.அந்தோணிக்கு பாதுகாப்பு துறையும், எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு வெளியுறவு துறையும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜிக்கு ரெயில்வேயும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு வேளாண்மை, உணவு மற்றும் சிவில் சப்ளை துறையும் ஒதுக்கப்பட்டுள்ளன.