நேற்று நடந்த ஐபிஎல் முதல் அரை இறுதிப் போட்டியில் ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி அபாரமாக ஆடி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. இன்று நடைபெறும் 2ஆவது அரை இறுதியில், சென்னை அணியும், பெங்களூரும் சந்திக்கின்றன. தென் ஆபிரிக்காவில் நடந்து வரும் ஐபிஎல் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டன.
நேற்று முதலாவது அரை இறுதிப் போட்டி செஞ்சூரியன் பார்க் மைதானத்தில் நடந்தது. ஜோஹன்னஸ்பர்க்கில் இன்று இரவு 8.00 மணிக்கு சென்னை-பெங்களூர் அணிகளுக்கு இடையிலான அரை இறுதிப் போட்டி நடைபெறுகிறது. ,