அமிர்தலிங்கத்தின் மகனெனக் கூறி வர்த்தகர்களிடம் பணம் கேட்டு மிரட்டல்

telephone.jpgதமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளரான காலம் சென்ற அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மகனெனக் கூறும் ஒருவர் கொழும்பிலுள்ள வர்த்தகர்கள், முக்கிய பிரமுகர்களிடம் தொலைபேசிமூலம் பணம் கேட்டு மிரட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வர்த்தகர்கள் முக்கியஸ்தர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை எடுக்கும் இந்நபர் தான் அமிர்தலிங்கத்தின் மகன் எனவும் தான் லண்டனிலிருந்து வந்திருப்பதாகவும் கூறி பணம் தரவேண்டுமென அச்சுறுத்துவதாக சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை சம்பந்தப்பட்ட வர்த்தகர்களை லண்டனிலிருந்து தொடர்பு கொண்ட அமிர்தலிங்கத்தின் மனைவியான மங்கையர்க்கரசி தனது இருமகன்களும் லண்டனிலேயே இருப்பதாகவும் அவர்களுக்கும் இந்த பணம் கேட்கும் சம்பவங்களுக்கும் எவ்வித தொடர்புமில்லையெனவும் தனது மகனெனக் கூறி வேறு எவரோ பணம்பெற முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அட எப்படியெல்லாம் கிளப்புறாங்கப்பா…..

    Reply