ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான இரண்டாவது அமர்வு இன்று நடைபெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச் சாட்டுக்களை மறுத்து ரஷ்யா மற்றும் சீனப் பிரதிநிதிகள் நேற்றைய அமர்வில் உரையாற்றினர். ஏனைய நாடுகளின் பிரதிநிதிகள் இன்று உரையாற்றவுள்ளனர் எனவும் அமைச்சு அறிவித்துள்ளது.