தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைக்கப்படுவர்

fonseka-000.jpgவட மாகாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் இணைக்கப்போவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிங்கள வார இதழொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட வடமாகணத்தின் பாதுகாப்பை அதிகரிக்கவுள்ளதாகவும் இதற்கு இராணுவத்தில் இணைக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கிழக்குமாகாணம் புலிகளிடம் இருந்து மீட்கப்பட்டதை அடுத்து அந்த மாகாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் இணைத்து கிழக்கின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது போன்றே இந்த நடவடிக்கையும் என குறிப்பிட்டுள்ளார். இரண்டு இலட்சமாக உள்ள இராணுவத்தை முன்று இலட்சமாக அதிகரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *