யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் 5 ஆம் திகதி

மூன்றாண்டுகளாக பிற்போடப்பட்டு வரும் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் ஐந்தாம் திகதி வெள்ளிக்கிழமை காலை யாழ்ப்பாண செயலகத்தில் நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கே.கணேஷ் அறிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கடைசியாக 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16 ஆம் திகதி நடைபெற்றது. இதன் பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தைக் கூட்ட அரசாங்க அதிபர் மூன்று முறை அறிவித்திருந்தும் பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்துக்கு சமூக சேவை மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் வடமாகாண விசேட செயலணிக் குழுத் தலைவருமான டக்ளஸ் தேவானாந்தா தலைமை தாங்குவார். கூட்டத்தில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண ஆளுநர், வடமாகாண சபையின் செயலாளர் ஆகியோர் பங்கு கொள்வரென அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *