பரீட்சைகள் ஆணையர் தலைமையிலான குழு அடுத்த வாரம் வவுனியா விஜயம்

11edu-min.jpgவன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியுள்ள மாணவர்களுக்கு ஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவது தொடர்பில் முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தலைமையிலான பரீட்சைத் திணைக்களக் குழுவொன்று வவுனியாவுக்குச் செல்லவுள்ளது.

கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவின் பணிப்புரைக்கமைய இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பரீட்சைகள் ஆணையாளர் தலைமையிலான குழு அடுத்த வாரம் வவுனியாவுக்குச் செல்லவுள்ளதாகக் கல்வியமைச்சு தெரிவித்தது.

இது தொடர்பில் கல்விய மைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவிக்கையில், வவுனியாவிலிருந்து இடம்பெயர் ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களுக்கு க.பொ.த. உயர்தரப்பரீட்சையை அங்கு நடத்துவதற்கான முன்னோடி நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கென கொழும்பிலிருந்து றோயல் கல்லூரி, டி.எஸ். சேனநாயக்க கல்லூரி போன்ற உயர் கல்லூரிகளிலிருந்து தேர்ச்சியுள்ள ஆசிரியர்கள் அங்கு அனுப்பிவைக்கப்பட்டு பரீட்சைக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதற்கிணங்க ஐந்தாமாண்டு புலமைப்பரீட்சையும் ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் நடத்தப்பட வுள்ளதால் அப்பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களைச் சந்தித்தல் உட்பட அதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்வதற்காக மேற்படி குழுவினர் வவுனியாவிற்குச் செல்லவுள்ளனர். இவர்களுடன் கொழும்பிலிருந்து ஆசிரியர் குழுவொன்றையும் அனுப்பி அம்மாணவர்களின் கல்வி நிலை பற்றி ஆராயவும், பரீட்சைக்கு அவர்களை ஆயத்தப்படுத்தவும் நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படுமென அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *