பெண்கள் உலக கோப்பை: அரையிறுதியில் இந்தியா

women-20-20.jpgஇங்கி லாந்தில் நடக்கும் பெண்கள் உலக கோப்பை டுவென்டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இலங்கை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. மழை காரணமாக போட்டி18 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி18 ஓவரில் 6 விக்கெட் இழப்பற்கு 94 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 16.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா அணி சார்பில் பூனம் ராவுட் 40 பந்துகளில் 30 ரன்களும், மிதாலி ராஜ் 22 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினர். இந்த வெற்றி மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *