பன்றிக் காய்ச்சல் வைரஸ¤டன் இலங்கைக்குள் வந்த சிறுவனுடன் பயணித்தவர்களின் விபரங்களை சுகாதார அமைச்சு குடிவரவு – குடியகல்வு திணைக்களத்திடம் கோரியுள்ளது.
அதேநேரம், வத்தளையில் கண்டுபிடிக்கப்பட்ட பன்றிக் காய்ச்சல் சிறுவனுடன் நெருங்கிப் பழகியவர்கள் தொடர் பாகவும் சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
கடந்த 14 ஆம் திகதி காலை 11.50 க்கு சிங்கப்பூரி லிரு ந்து இலங்கை வந்த எஸ். கியூ. 466 ரக சிங்கப்பூர் எயார் லைன்ஸ¤க்கு சொந்தமான விமானத்தில் 185 பய ணிகள் வருகை தந்தனர்.
இதில் 91 பேர் மட்டுமே குடி வரவு – குடியகல்வு திணைக்களத்திடம் இறங்குவ தற்கான படிவத்தை நிரப்பி கையளித்துள் ளனர். ஏனைய 94 பேர் படிவங்களைக் கையளிக்கவில்லை. 94 பேரும் இலங்கை க்குள் வந்துள்ளனரா? அல்லது விமான நிலையத்திலிருந்து டிரான்சிட் முறையில் வேறு விமானத்தில் சென்றுவிட்ட னரா? என்பது பற்றிய விபரங்களை விமான நிலைய குடிவரவு – குடியகல்வு திணைக்களத்திடம் விபரங்களை சுகாதார அமைச்சு கோரியுள்ளது.
(ஏ) எச். ஐ. என். ஐ. வைரஸ் தொற்றிய வர்கள் இலங்கைக்குள் வருவார்களேயா னால் அவர்களையும் அவர்களுடன் நெருங் கிப் பழகியவர்களையும் தனியான முறை யில் சிகிச்சையளிக்கவும் சுகாதார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
பன்றிக் காய்ச்சல் வைரஸ் இலங்கைக் குள் வந்துள்ளதையடுத்து என்ன வகை யான முன்னெச்சரிக்சை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது பற்றிய அவசர கூட்டமொன்று நேற்று சுகாதார அமை ச்சில் நடைபெற்றது.சுகாதார அமைச்சின் பதில் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக்க தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது.
பன்றிக் காய்ச்சலுடனான நோயாளி ஒரு வரை பராமரிக்கும், சிகிச்சையளிக்கும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் காய்ச்சல் தொற்றிவிடாதபடி எவ்வாறான பாதகாப்பு நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பது பற்றியும் இங்கு ஆராயப்பட்டது.
நோய்த் தடுப்புக்கான மருந்து வகைகளை போதுமான அளவு உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கியுள்ளதுடன் இன்னும் தேவையேற்படும் பட்சத்தில் மருந்து வகைகளை பெற்றுக்கொடுக்கவும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆயத்தமாக இருக்கிறது என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் விமான நிலையத்தில் பயணிகள் வருகை பிரிவில் பன்றிக் காய்ச்சல் வைரஸடன் வருபவர்களை கண்காணிக்கும் பகுதியில் ஆளணியை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.