கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 11 இல் ஆரம்பம் – ஓகஸ்ட் 23 இல் ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை

examination_department.jpgஇவ் வருடம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்கான நாட்களை பரீட்சைத் திணைக்களம் முடிவு செய்துள்ளது. அதன்படி கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 11 ஆம் திகதிமுதல் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஓகஸ்ட் 23 ஆம் திகதி நடத்துவதற்கு பரீட்சைத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *