இரான் அதிபர் தேர்தல் முடிவுகளில் ஏமாற்று வேலைக்கு இடமில்லை; போராட்டங்கள் முடிவுக்கு வரவேண்டும்: அயதுல்லா கமெனெய்

khamenie.jpgஇரானில் கடந்த வாரம் நடந்த சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தல்களை தொடர்ந்து நடக்கும் போராட்டங்கள் ஏற்கமுடியாதவை என்றும், அவை நிறுத்தப்பட வேண்டும் என்றும், வெள்ளிக்கிழமை தொழுகையின் போது இரானிய அதியுயர் மதத்தலைவரான அயதொல்லா அலி கமெனெய் கூறியுள்ளார்.

அதிபர் அஹமதிநெஜாத் அவர்கள் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதற்கான தனது முன்பெப்போதும் இல்லாத அளவிலான ஆதரவை வழங்கிய பின்னர் முதன்முதலாக பகிரங்க வைபவத்தில் உரையாற்றிய அவர், அந்த போராட்டங்கள் தொடர்ந்தால், அவற்றின் விளைவுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களே பொறுப்பு என்று கூறினார்.

அகங்கார சக்திகளும், அமெரிக்காவிலும் வேறு ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள ஊடகங்களும் தேர்தலுக்குப் பின்னர் தமது சுயரூபத்தைக் காட்டிவிட்டார்கள் என்று அயதொல்லா கமெனெய் சாடினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *