போரினால் இடம்பெயர்ந்த வன்னி மக்களை மீளக்குடியமர்த்துவதை பிற்போடவேண்டாம் – யாழ். ஆயர்

வன்னியில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழுகின்ற மூன்று இலட்சம் மக்களையும் மீண்டும் அவர்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும் எனவும், இதனைப் பிற்போடக் கூடாதெனவும் யாழ். ஆயர் அதிவண.தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

வத்திக்கான் வானொலிக்கு ஆயர் அளித்த பேட்டியிலேயே இவ்வாறு கூறியுள்ளார். வன்னிப் பகுதியில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு அந்த மக்களின் வீடுகள் புனரமைக்கப்பட்டு உள் கட்டமைப்பு வசதிகள் சீராகச் செய்ய வேண்டும் எனவும் ஆயர் வலியுறுத்தியுள்ளார்.

தொண்டர் நிறுவனங்களை அகதி முகாம்களில் உள்ள மக்களுக்கு நிவாரணப் பணிகளைச் செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது இந்த மக்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம், ஐ.நா. பணியாளர்கள், கரித்தாஸ் நிறுவனம் என்பன மட்டுமே மட்டுப்படுத்தப்பட்ட பணிகளை ஆற்ற அனுமதிக்கப்பட்டுள்ளன என்பதையும் ஆயர் குறிப்பிட்டுள்ளார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *