முன்னாள் தமிழ்க் கல்வி அமைச்சர் இணைப்பு இயக்குநராக நியமனம்

முன்னாள் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சரும் தொழிலாளர் விடுதலை முன்னணியின் செயலாளரும் ஆசிரியர் விடுதலை முன்னணியின் தலைவருமான எஸ்.அருள்சாமி ஜனாதிபதியின் இணைப்பு இயக்குனராகக் கடந்த 23 ஆம் திகதி ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். அலரிமாளிகையில் கடந்த 23 ஆம் திகதி நடைபெற்ற வைபவத்தின் போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்படி நியமனக் கடிதத்தை அருள்சாமியிடம் கையளித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளராக அருள்சாமியை ஏற்கனவே ஜனாதிபதி நியமித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *