விபத்துக்களான யேமன் நாட்டு விமானத்தில் கோளாறு இருந்தது

image-air-team.jpgஇந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏமன் நாட்டைச்சேர்ந்த விமானத்தில் கோளாறு இருந்ததாக, 2007 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகவும், குறிப்பிட்ட அந்த விமான நிறுவனம் பிரான்ஸ் நாட்டின் பாதுகாப்புத்துறையின் ரகசிய கண்காணிப்பில் இருந்து வந்ததாகவும் பிரான்ஸ் நாட்டின் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த 310 ரக ஏர் பஸ் விமானம், அதன் தயாரிப்பு நிறுவன அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் கடந்த மேமாதம் முழுமையாக சோதனை செய்யப்பட்டதாகவும் யேமென் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோமொரோஸ் தீவுகளுக்கு அருகே இந்த விமானம் விபத்துக்குள்ளானபோது அதில் 153 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். இவர்களில் ஒரே ஒரு குழந்தை மட்டும் தப்பிப்பிழைத்தது. யெமெனியா விமான நிறுவனம், ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைசெய்யப்பட்ட விமான நிறுவனங்களின் பட்டியலில் இல்லை என்று தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் போக்குவரத்து அமைச்சர், இந்த பட்டியல் உலகம் தழுவிய அளவில் விரிவாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *