உள்ளுராட்சி மன்றங்கள் அனைத்தும் கனணி மயப்படுத்தப்படும் – அமைச்சின் செயலாளர் தகவல்

நாடு பூராவும் உள்ள உள்ளுராட்சி மன்றங்களைக் கனணி மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டடுள்ளதாக உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் கெசன் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இலைங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபண வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, இத்திட்டத்திற்கு தகவல் தொழிநுற்ப இலத்திரணியல் உள்ளுராட்சி மன்ற சேவை திட்டம் என்று பெயரிடபட்டுள்ளது. முதலாவது செயற்திட்டம் தற்பொழுது நீர் கொழும்பு மாநகரசபை, சீதவாக்க நகரசபை மற்றும் ஹோமாகம பிரதேசசபை ஆகியவற்றை மையமாகக் கொண்டு; ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழிநுற்பதொடர்பாடல் முகவர் நிறுவனத்தின் இச்செயற்திட்டமானது அடுத்த வருடம் சகல உள்ளுராட்சி மன்றங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு தேவையான மென்பொருட்களைத் தயாரிக்கும் பணி அடுத்த வருட முற்பகுதியில் நிறைவடையுமென தகவல் தொழிநுற்பதொடல்பாடல் முகவர் நிறுவணத்தின் பணிப்பாளர் வசந்தந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்படடுள்ளவாறு நாட்டில் தகவல் தொழிநுற்பத்தையும் வலுவடையச்செய்யும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *