சீன நிறுவனங்களுக்காக இலங்கையில் பிரத்தியேக வலயம்

ஆசியாவின் மிகப்பெரும் பொருளாதாரமான, சீனாவிடமிருந்து மேலும் முதலீட்டை கவரும் ஒரு முயற்சியில், இலங்கைத் சீன நிறுவனங்களுக்கு பிரத்தியேக வலயம் ஒன்றை அளித்திருக்கிறது.

தலைநகர் கொழும்புக்கு சுமார் 55 கிமீ தூரத்தில் இருக்கும் மீரிகமவில் , ஹாங்காங்கிலிருந்து இயங்கும் ஹுய்ச்சென் இன்வெஸ்ட்மன்ட் ஹொல்டிங்க்ஸ் என்ற நிறுவனம் இந்த பொருளாதார வலயத்தை உருவாக்கும் என்று இலங்கையின் முதலீட்டு மேம்பாட்டு நிறுவனம் கூறியது.

தயாரிப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள சீன நிறுவனங்கள் இந்த வலயத்தில் தமது உற்பத்தியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் ஒரு வெளிநாடு இத்தகைய வசதியைப் பெறுவது என்பது இதுவே முதல் முறை என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *