டி.கே.பட்டம்மாளின் உடல் மைலாப்பூரில் தகனம்

pattammal.jpgசென்னையில் நேற்றுக் காலமான பிரபல கர்நாடக இசை மேதை  டி.கே.பட்டம்மாளின் உடல் நேற்று மாலை மைலாப்பூரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.. பெருந்திரளான மக்கள் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டனர். மரணச்செய்தி கேட்டதும் இசை உலகைச் சோந்த பலர் டி.கே.பட்டம்மாளின் இல்லத்துக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பிரபல கர்நாடக இசைப் பாடகர் பால முரளி கிருஷ்ணா,  நடிகை வைஜயந்திமாலா,  கவிஞர் வாலி,  நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன்,  பிரபல வீணை இசைக் கலைஞர் வித்தியா சங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இவரது மறைவு குறித்து அ..தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அனுதாபச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடல்களை தனது நிகழ்ச்சிகளிலும் திரைப்படங்களிலும் பாடி தமது தேச பக்தியை வெளியிட்டவர் டி.கே.பட்டம்மாள் என அந்த அனுதாபச் செய்தியில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *