ஆப்பிரிக்காவில் உருவாக்கப்பட்ட முதலாவது எச்.ஐ.வி/ எயிட்ஸ் தடுப்பு மருந்தை தென்னாப்பிரிக்கா ஆய்வூகூடத்தில் ஆட்களுக்கு ஏற்றி பரிசோதிக்கிறது. இந்த மாதத்தில் இந்த பரிசோதனைக்காக 36 தொண்டர்கள் பயன்படுத்தப்படுவார்கள். இந்த பரிசோதனைகள் ஏற்கனவே அமெரிக்காவில் ஆரம்பமாகிவிட்டன.
தென்னாப்பிரிக்காவில்தான் உலகின் அதிகமான எயிட்ஸ் நோயாளிகள் இருக்கிறார்கள். மருத்துவ பரிசோதனை வெற்றிபெற்றாலும், இந்த தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்குவர இன்னும் 10 வருடங்கள் பிடிக்கும் என்று மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.