அணுச்செறிவூட்டல் தொழில்நுட்பத்தை இந்தியா பெறுவதை அமெரிக்கா எதிர்க்கவில்லை என்கிறார் ஹிலாரி

இந்தியா அணுசக்தி செறிவூட்டல் தொழில்நுட்பத்தைப் பெறுவதை அமெரிக்கா எதிர்க்கவில்லை என்று தெரிவித்தார் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன்.

திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேசினார்.

அவரது இந்தப் பயணத்தின்போது தொழில்நுட்ப பாதுகாப்பு ஒப்பந்தம், அணுசக்தி எரிபொருள் பயன்பாட்டை இறுதியில் கண்காணிக்கும் ஒப்பந்தம் ஆகியவை அதில் அடங்கும். தொழில்நுட்ப பாதுகாப்பு ஒப்பந்தப்படி, இனிமேல் அமெரிக்க சாதனங்களைக் கொண்ட செயற்கைக்கோள்களை வர்த்தக ரீதியாக இந்தியா விண்ணில் செலுத்த முடியும். அணுசக்தி எரிபொருள் பயன்பாட்டை இறுதியில் கண்காணிக்கும் ஒப்பந்தத்தை அடுத்து, இனிமேல் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கான பாதுகாப்பு ஆயுதங்களை வழங்க முடியும்.

மேலும், இன்றைய ஒப்பந்தத்தில், அமெரிக்க நிறுவனங்கள் அணு உலைகளை அமைக்க இரு இடங்களை ஒதுக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது. சுமார் 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள அந்த ஒப்பந்தங்கள் மூலம், இந்தியாவுக்குத் தேவையான அணுஎரிபொருள்களை அமெரிக்க நிறுவனங்கள் வழங்கும். இதுதவிர, சுகாதாரம், கல்வி, அறவியில் தொழில்நுட்பம், மகளிர் அதிகாரமளிப்பு உள்ளிட்ட பல துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *