பாதாளக் குழுக்கள் பற்றிய தகவலை எனக்கு நேரடியாக அறிவியூங்கள் – பாதுகாப்புச் செயலாளர் கோரிக்கை

kottabaya.jpgபாதாளக் குழுக்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அது பற்றி குற்றத் தடுப்பு பிரிவினருக்கோ அல்லது நேரடியாக தமக்கோ அறிவிக்கும்படி பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாதாளக் குழுக்கள் மற்றும் திட்டமிட்டு குற்றச் செயல்களைப் புரிவோரின் செயற்பாடுகளை ஒழிக்க விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொலிஸார் மற்றும் அதிரடிப்படை உறுப்பினர்கள் அடங்கிய விசேட பிரிவொன்று இதற்காக உருவாக்கப்பட்;டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் இராணுவத்தினரின் ஒத்துழைப்பும் இதற்காக பெற்றுக்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.

புலிப்பயங்கரவாதிகள் முற்றாகத் தோற்கடிக்கப்பட்ட பின்னர் பாதாளக்; குழுக்கள் மற்றும் திட்டமிட்டு குற்றச் செயல்களைப் புரிவோரின் செயற்பாடுகளை ஒழிப்பதில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்திவருவது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *