பல வருடங்களாக மூடப்பட்டிருந்த வவுனியா ஹொரவப்பத்தானை வீதி போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது

வடமத்திய மாகாண முதலமைச்சர் பேட்டி பிரேம்லால் திசாநாயக்கவினால் வவுனியா ஹொரவப்பத்தானை இன்று வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டு, ஹொரவப்பத்தானைக்கும் வவுனியாவுக்கும் இடையிலான பேருந்து போக்குவரத்து இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த வைபவத்தில் அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவும் கலந்து கொண்டார்.

பல வருடங்களாக மூடப்பட்டிருந்த இந்த வீதி திறக்கப்பட்டுள்ளதையடுத்து, நாளை புதன்கிழமை 22 ஆம் திகதி முதல் வவுனியாவுக்கும் திருகோணமலைக்கும் இடையிலான நேரடி பேருந்து போக்குவரத்துக்கள் ஆரம்பமாகவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலை 7.30 மணிக்கு வவுனியா போக்குவரத்து சாலையைச் சேர்ந்த பேருந்து வவுனியாவில் இருந்து திருகோணமலைக்குப் புறப்பட்டுச் செல்லும். அதிகாலை ஹொரவப்பத்தானையில் இருந்து வவுனியாவுக்கு வருகின்ற ஹொரவப்பத்தானை சாலையைச் சேர்ந்த பேருந்து வவுனியாவில் இருந்து காலை 8.30 மணிக்கு திருகோணமலைக்குப் புறப்பட்டுச் செல்லும்.

இதேவேளை, காலையில் மன்னாரிலிருந்து புறப்படும் மன்னார் போக்குவரத்துச் சாலையைச் சேர்ந்த பேருந்து வவுனியாவை வந்தடைந்து, காலை 9 மணிக்கு இங்கிருந்து திருகோணமலைக்குப் புறப்பட்டுச் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் இருபது வருட காலத்தின் பின்னர் மன்னார் திருகோணமலை மற்றும் வவுனியா திருகோணமலை நேரடி பேரூந்து சேவைகள் ஆரம்பமாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *