வவுனியா முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோரை விடுவிப்பதற்கான வழிவகைகளை ஆராயுமாறு உத்தரவு

supremecourtphoto.jpgவவுனி யாவில் இடைத்தங்கல் முகாம்களில் இருந்து வெளியேற அனுமதிகோரும் மக்களை விடுவிக்கக்கூடிய வழிவகைகளை ஆராயுமாறு இலங்கை உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

சட்ட ரீதியான அனுமதி இன்றி விருப்பத்துக்கு மாறாக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்று தொடர்பாக ஆராய்ந்த போதே உயர் நீதிமன்றம் அந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

வவுனியா முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நால்வர் தொடர்பாக இந்த மனுவை அவர்களது உறவினர் ஒருவர் தாக்கல் செய்திருந்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *