கட்டுநாயக்காவுக்கு ரயில் சேவை

train0000.jpgகட்டு நாயக்கா விமான நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டைக்கு முதல் முதலாக ரயில் சேவையை நடத்துவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து கொழும்பிற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் நலன்கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்திலிருந்து வரும் பயணிகள் மற்றும் விமானம் மூலம் செல்லவுள்ள பயணிகள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். இதனை நீக்குவதற்கு இச்சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. தற்போது கட்டுநாயக்கா விமான நிலைய ரயில் நிலையம் திருத்தப்படுவதுடன் புகையிரத வீதிகளின் புனரமைப்பு பணிகளும் ஆரம்பமாகியுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *