டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மவுசை இழக்கவில்லையென இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். சமீபகாலமாக ரி20 போட்டி ரசிகர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் பாரம்பரியம் மிக்க டெஸ்ட் போட்டி மெல்ல மறைந்துகொண்டிருக்கிறது என்ற விமர்சகர்களின் கருத்தை கங்குலி மறுத்தார்.
சர்வதேச கிரிக்கெட் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள லண்டன் வந்த கங்குலி நிரூபர்களிடம் கூறியதாவது;
டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டு தனித்துவம் வாய்ந்தது.அதன் முக்கியத்துவம் நீடிக்க வேண்டுமென்பதற்காகவே டெஸ்ட் போட்டியுடன் மற்ற போட்டிகளும் இருக்கும்.கிரிக்கெட் விளையாட்டின் மூலவடிவமே டெஸ்ட் போட்டிகள்தான்.முன்னாள் வீரர்கள் பலர் அதில் சிறப்பு பெற்றுள்ளனர்.அதன் முக்கியத்துவத்தை யாரும் எப்போதும் மறக்கமுடியாது.
இந்தியாவைப் பொறுத்தவரை மகேந்திரசிங் தோனி தலைமையிலான அணி சமீபகாலமாகவே சிறப்பாக விளையாடி வருகிறது.கடந்த 2 ஆண்டுகளிலோ அல்லது அதற்கு முன்னரோ வெளிக்காட்டிய ஆட்டத்தை தொடர்ந்து கடைப்பிடிப்பார்களேயானால் விரைவில் உலகில் முதல் அணியாக இந்தியா திகழும் என்றார் கங்குலி.