குழந்தையைக் கிணற்றில் வீசிக் கொலை செய்த தாய் கைது

ஒன்றரை வயது ஆண் குழந்தையைக் கிணற்றில் வீசி தாயொருவர் கொலை செய்த சம்பவம் தங்கொட்டுவகெட்டியவெல பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. வீட்டுக்கு அருகாமையில் உள்ள கிணற்றில் இருந்து குழந்தையின் சடலம் நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டது.

கணவனுக்கும் இப்பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகவே அவர் குழந்தையைக் கிணற்றில் வீசியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் தங்கொட்டுவ பொலிஸார் குழந்தையின் தாயாரைக் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தையடுத்து தலைமறைவான தந்தையை பொலிஸார் தேடி வருகின்றனர். குழந்தையின் சடலம் சிலாபம் ஆஸ்பத்திரியில் மரண விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *