யாழ்ப்பாணத்தில் முதலாவது சதொச நிலையம் – அமைச்சர் பந்துல இன்று திறந்து வைத்தார்

sathosa-outlet.jpgயாழ்ப் பாணத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது கூட்டுறவு மொத்த விற்பனை நிலையம் (சதொச) இன்று காலை திறந்து வைக்கப்பட்டதாக வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

யாழ். வின்சர் திரையரங்கில் அமைக்கப்பட்டுள்ள இந்த கூ.மொ.வி. நிலையத்தை வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன வைபவரீதியாகத் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சமூக சேவைகள்,  சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்சக்தி அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் சதொச தலைவர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

யாழ். குடாவில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதற்கமைய யாழ்ப்பாணத்தில் கொழும்பு விலைகளில் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட ஏனைய பொருட்களை விற்பனை செய்வதற்காக 3 கூ.மொ.வி. நிலையங்களை அமைக்க வர்த்தக மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.  யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள ஏனைய இரு கூ.மொ.வி. நிலையங்களும் விரைவில் திறக்கப்படவுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *